Pannaiyarum Padminiyum songs review

PUBLISHED DATE : 26/Nov/2013

Pannaiyarum Padminiyum songs review

Pannaiyarum Padminiyum Songs Review in Tamil

Kovai Aavee


இ.ஆ. பாலகுமாராவுக்கு பிறகு விஜய் சேதுபதி நடித்து வெளிவர இருக்கும் படம் பண்ணையாரும் பத்மினியும். காரை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை என்று சொல்லப் படுகின்ற இந்தப் படத்திற்கு இசை ஜஸ்டின் பிரபாகரன். மறைந்த நம் வாலிபக் கவிஞர் வாலி பாடல்களை எழுதி இருக்கிறார். இசையமைப்பாளரும் ஒரு பாடலை எழுதியிருக்கிறார். சோனி நிறுவனம் இதன் ஆடியோவை வெள்ளியன்று வெளியிட்டது.

 

 1. SPB சரண் மற்றும் அனு ஆனந்த் பாடியிருக்கும் "எனக்காக பொறந்தாயே" எனும் பாடல். இரைச்சல் இல்லாத இசையில் நமக்கு பழைய SPB பாடலை கேட்பது போல் இருக்கிறது. ஏ.ஆர். ரகுமானின் டச் ஆங்காங்கே தெரிகிறது.

 

 2. இதே பாடல் மீண்டும் "ஒனக்காக பொறந்தேனே" என்று பல்ராம் மற்றும் சந்தியாவின் குரல்களில் ஒலிக்கிறது. ஆனால் கொஞ்சம் வித்தியாசமான இசை நம்மை இன்னும் கொஞ்சம் பழைய காலத்திற்கு அழைத்து செல்வதை உணரலாம்.

 

 3. "பேசுறேன்..பேசுறேன்" பாடலை இசையமைப்பாளர் தன்னுடைய சொந்தக் குரலில் பாடி இசை விருந்து படைத்திருக்கிறார். இடையிடையே கிராமத்து பாட்டிகளின் ஒப்பாரியையும் டிஜிட்டலில் பதிவு செய்திருக்கிறார்.  ஒரு சாயலில் யுவனின் குரலை நினைவுபடுத்திப் போகிறார்.

 

 4.  "எங்க ஊரு வண்டி" நெய்வேலி ஸ்ரீராம், அகிலேஷ், அல்லான், கௌதம், ஹரிப்ரியா, அஞ்சனா, யாழினி ஆகியோர் இணைந்து பாடியிருக்கும் குதூகலப் பாடல். காரின் பெருமை பேசும் இந்தப் பாடல் நிச்சயம் தமிழ் சினிமாவிற்கு ஒரு வித்தியாசமான பாடலாக இருக்கும்.

 

 5.  காந்தக் குரலுக்கு சொந்தக் காரன் 'கார்த்திக்' மற்றும் பிரசாந்தினி பாடியிருக்கும் டூயட் "காதல் வந்தாச்சோ". கிராமத்தில் இருவருக்குள் காதல் தோன்றும் தருணம் பாடலாய் வருகிறது.

 

 முதல் முறை கேட்கையிலேயே மனதை வருடிச் செல்கிறது.  குத்துப் பாடல்களோ, ஹீரோ இன்ட்ரோ சாங்கோ இல்லாமல் வந்திருக்கும் இந்த ஆல்பம் நிச்சயம் அந்த "பத்மினி" காரைப் போலவே பழையதாய் தோன்றினாலும் எப்போதும் "OLD is GOLD" அல்லவா?

 

Rating - 7/10

User Comments