ஒரு ஊர்ல ரெண்டு ராஜா இசை விமர்சனம்
கோவை ஆவீ
விமல், சூரி, ப்ரியா ஆனந்த் நடித்து வெளிவர இருக்கும் படம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா. இமானின் இசையில் வெளிவந்திருக்கும் இந்தப் படத்தின் ஆடியோ சோனி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இதன் பாடல்கள் எப்படி இருக்குன்னு பார்ப்போம்.
சுந்தரிப் பெண்ணே - யுகபாரதியின் வரிகளுக்கு ஸ்ரேயா கோஷலின் அக்க்ஷரம் தப்பாத உச்சரிப்பில் அழகாய் ஒலிக்கும் பாடல். தோழியின் காதலை வினவும் 'யாரோ யாரோடி' டைப் பாடல்.
குக்குறு குக்குறு - நடிகர் நடிகைகள் பாடுவது பேஷனாகிவிட்ட இந்த சீசனில் லேட்டஸ்ட்டாக கோலிவுட்டில் களமிறங்கியிருப்பது லக்ஷ்மி மேனன். உஷா உதூப்பின் ஹை பிட்ச் வாய்ஸ் போலவே இருக்கும் இவரது குரல் கேட்கக் கேட்க ரசிக்க முடிகிறது. இவரது குரலுக்கு ஏற்றவாறு சத்யனும் பாடியிருப்பது பாடலுக்கு வலு சேர்க்கிறது.
ஹரிச்சரண், வந்தனா ஸ்ரீநிவாசன் பாடியிருக்கும் மழைக்காத்தா நீ பாடல் உற்சாக டூயட். ட்யூன் புதிதாக இல்லாவிட்டாலும் சென்சேஷனலாக பாடியிருக்கும் வந்தனாவின் குரலுக்காகவே பாடலை ரசிக்கலாம்.
காதல் கொண்ட நாயகன், அவள் நினைவில் உருகிப் பாடும் பாடல் ஓடும் ரயிலை. யுகபாரதியின் காதல் வரிகளை இமானின் தாலாட்டும் இசையும் அபய் ஜோத்பர்கரின் குரலும் மெருகேற்றுகிறது.
ஒரு ஊருல ரெண்டு ராஜா - 'காதல் கசக்குதய்யா' பாடலை கேட்பது போன்ற உணர்வை கொடுக்கும் டைட்டில் ஸாங். ஜெயமூர்த்தி, பாலாஜி பாடியிருக்கும் பாடல் வருத்தப்படாத வாலிபர் சங்கங்கள் குத்தாட்டம் போட்டு ரசிக்கக் கூடிய பாடல்.
மொத்தத்தில் இரண்டு ராஜாக்களும் இசையில் இரண்டாம் புலிகேசியே..!
Click here to listen the songs
Rating: 5/10