Arima Nambi Songs Review - Sivamani's Debut
கோவை ஆவி
விக்ரம் பிரபு, ப்ரியா ஆனந்த் நடிக்க கலைப்புலி தாணு வழங்கும் அரிமா நம்பி. இந்தப் படத்தின் இசையமைப்பாளர் நமக்கு மிகவும் பரிச்சயமான "டிரம்ஸ்" சிவமணி தாங்க. முதல் முறை ஒரு திரைப்படத்திற்கு சிவமணி இசையமைக்கும் பாடல்கள் எப்படி இருக்குன்னு பார்ப்போம்.
1. "இதயம் என் இதயம்" காதல் வானில் பறக்கும் நாயகன் நாயகியை நினைத்து உருகி உருகி பாடும் பாடல். தமிழ் வார்த்தைகளுக்கு கூடுதல் அழுத்தத்தோடு ஜாவேத் அலி பாடி இருக்கிறார்.
2. ஸ்ரேயா கோஷல் பாடியிருக்கும் " நீயே..நீயே.." பாடல் தெவிட்டாத தெள்ளமுது. 'அதிரடி' மன்னன் சிவமணியிடமிருந்து இப்படி ஒரு மெல்லிய இசை நிச்சயம் 'சர்ப்ரைஸ்' தான். இந்தப் பாடல. பாடல் முழுதும் வரும் அந்த தண்ணீர் சத்தம் சலிப்பு வர செய்கிறது.
3. "நானும் உன்னில் பாதி" - அல்மா மற்றும் ரீட்டா பாடியிருக்கும் ஐட்டம் நம்பர். கிறக்கத்துடன் ஒலிக்கும் இந்தப் பாடலின் இடையில் பாடலுக்கு இடையே வரும் டிரம்ஸ் கேட்டது போல் இருக்கிறது.
4. ஷப்பிர் குமார், ரிஸ்வி இணைந்து பாடியிருக்கும் "யாரோ யார் அவள்" - தன் மனம் கவர்ந்த பெண்ணை பற்றி நாயகன் பாடும் பாடல். மற்ற படங்களுக்கு சிறப்பாய் டிரம்ஸ் வாசித்த சிவமணி தான் இசையமைக்கும் படத்துக்கு என்ன செய்வார்? இந்தப் பாடலும், பாடல் நெடுக ஒலிக்கும் டிரம்ஸ் இசையும், யூத் ரசிகர்களின் மனம் கவரும் வகையில் இருக்கிறது.
A.R. ரஹ்மானின் பல படங்களுக்கு உயிரூட்டியது சிவமணியின் இசை. அந்த 'தீம்' இசையில் இவர் செய்திருக்கும் தனி ஆவர்த்தனம்.
சிவமணியின் இசையை கேட்ட உடன் உங்களை அதிரவைக்கும், ஆனால், நீண்ட நாட்களக்கு உங்கள் மனதில் இடம் பிடிக்குமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்?
Rating - 5.0/10